பொது மலசலகூடத்தை அரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாது - பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார

Published By: Digital Desk 3

06 Nov, 2021 | 05:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வர்த்தமானியின் ஊடாக அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.

1970 ஆம் ஆண்டு காலக்கட்டத்தின் நிர்வாக தன்மையை தற்போது தொடர முடியாது. சுதந்திரமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அனைத்தையும் செயற்படுத்த வேண்டும் என கருதுகிறார்கள் பொதுமலசல கூடத்தை அரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வர்த்தக நடவடிக்கைகளை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தற்போது முன்னெடுக்க முடியாது. அரசாங்கம் சிறந்த பொறிமுறையின் ஊடாக செயற்படுகிறது. வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

பலவந்தமான முறையில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் சந்தையினை நிர்வகித்தால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படும். அவ்வேளையில் தான் அத்தியாவசிய பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்படும். தேவையான நேரத்தில் அரசாங்கம் சந்தை விவகாரங்களில் தலையிடும்.

அரசாங்கம் அனைத்தையும் செயற்படுத்த வேண்டும்.என பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.பொது மலசலக்கூடத்தை அரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாது. பேருந்தை அரசாங்கத்தால் நடத்த முடியாது.

ஆகவே அரசாங்கத்ததால் முடிந்த மற்றும் முடியாத பல விடயங்கள் உள்ளன. அரிசி,சீனி,பருப்பு ஆகியவற்றிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைக்கு கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டும். கட்டுப்பாட்டு விலை  நீக்கப்படாவிடின் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 160 ரூபாவை கடந்து செல்லும்.

ஆகவே அரசாங்கத்ததால் முடிந்த மற்றும் முடியாத பல விடயங்கள் உள்ளன. அரிசி, சீனி, பருப்பு ஆகியவற்றிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது. 

கொவிட் தாக்கத்தின் காரணமாக இறக்குமதி பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வர்த்தகர்கள் விரும்புவதில்லை. வெகுவிரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16