கர்ப்பிணிகள் , சிறுவர்கள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிப்பு - விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா

05 Nov, 2021 | 03:38 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த சில தினங்களாக கர்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதத்தில் சிறியளவு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமை மற்றும் மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமை என்பனவே இதற்கான பிரதான காரணமாகும் என்று சுகாதார அமைச்சின் குடும்பநல மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் 95 சதவீதமான கர்ப்பணிகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கர்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வீதம் குறைவடைந்திருந்தது. 

எனினும் கடந்த ஓரிரு தினங்களாக இந்த நிலைமை மாற்றமடைந்து , கர்பிணிகள் தொற்றுக்குள்ளாகும் வீதத்தில் சிறிதளவு அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது.

எனவே இதுவரையிலும் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாத கர்பிணிகளை இப்போதாவது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது மாத்திரமின்றி அநாவசியமாக வெளியிடங்களுக்குச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்துகின்றோம்.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. எவ்வாறிருப்பினும் கடந்த ஒரு வாரமான சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதமும் சிறிதளவு அதிகரித்துள்ளது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதில்லை என்பதால் அவர்களின் பாதுகாப்பை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களை அநாவசியமாக வெளியிடங்களுக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்துமாறு கோரவில்லை. 

சுகாதார விதிமுறைகளைக் கடைபிடித்து தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் பொறுப்பு பெற்றோருடையதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37