வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள், வீட்டுத்திட்ட பயனாளிகள் போராட்டம்  

Published By: Digital Desk 2

02 Nov, 2021 | 02:03 PM
image

எம்.நியூட்டன்

வடமாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள், வீட்டுத்திட்ட பயனாளிகள் இன்று செவ்வாய்க்கிழமை (2) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கமைப்பில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த மக்களால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் போராட்டத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு முதற்கட்ட நிதி மட்டுமே பெற்ற நிலையில் வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யமுடியாமல் உள்ள பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் "அரசே எம்மை வாழ விடு இல்லை வழியை விடு", "அரசே எமது வீட்டுத் திட்ட நிதியை தா" என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2 ஆயிரத்து 19 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்யுமாறு கோரியும், விவசாயிகளின் இரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டவை தொடர்பிலும் மற்றும் கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02
news-image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...

2023-12-11 16:03:35
news-image

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...

2023-12-11 15:20:09
news-image

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2023-12-11 15:19:19
news-image

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால்...

2023-12-11 15:46:41
news-image

எல்பிட்டியில் தாயும் மகனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்...

2023-12-11 13:47:47
news-image

மசாஜ் நிலையம் எனக் கூறி விபசார...

2023-12-11 13:47:20