ஞானசார தேரரின் நியமனம் குறித்து நீதியமைச்சர் வெளியிட்ட அதிருப்தி - ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவாராம்

Published By: Gayathri

01 Nov, 2021 | 08:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரைட இருக்கின்றேன். 

வெளிநாடு ஒன்றுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பியதுடன் இதுதொடர்பில் கலந்துரையாட எதிர்பார்க்கின்றேன்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பமை தொடர்பாக பல்வேறு விமசனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் நீதி அமைச்சர் என்ற வகையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, ஞானசார தேரரின் இந்த நியமனம் தொடர்பாக தனக்கு தெரியாது என்றும் இதுதொடர்பில் ஜனாதிபதி தன்னுடன் கலந்துரையாடவில்லை எனவும் அத்துடன் இந்த நியமனம் தொடர்பில் தனக்கு திருப்தியடைய முடியாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஜனாதிபதி செயலணி அமைத்து அதற்கு உறுப்பினர்கள் நியமிப்பது ஜனாதிபதியின் அதிகாரத்துடன் சம்பந்தமானது. அதுதொடர்பில் யாருடனும் கலந்துரையாட வேண்டும் என்றில்லை. 

சட்டத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்ற காரணத்தினாலே பலரும் இந்த செயலணி தொடர்பில் வினவுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 26 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டு 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியை அமைத்து அதற்கான 13 உறுப்பினர்களின் பெயர்களையும் வெளியிட்டிருந்தார். 

அத்துடன் ஞானசார தேரரின் தலைமையிலான 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி முதல் தடவையாக கடந்த 31ஆம் திகதி கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15