நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் பலி - பொலிஸ் பேச்சாளர்

Published By: Gayathri

01 Nov, 2021 | 02:56 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற விபத்துக்களில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 12 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

இதற்கான காரணம் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மற்றும் கவனயீனமாக வாகனங்களை செலுத்துவதாகும்.

ஞாயிறன்று இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்த ஐவரில் மூவர் பாதசாரிகளாவர். எனவே வீதிகளில் நடந்து செல்பவர்கள் உள்ளிட்ட சகல நபர்கள் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்துகின்றோம்.

மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்களும், வீதிகளில் செல்பவர்கள் உள்ளிட்ட வேறு நபர்களும் அதிகளவில் உயிரிழக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளானால் படுகாயமடையக் கூடிய மற்றும் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 15:41:08
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38