(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற விபத்துக்களில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 12 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இதற்கான காரணம் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மற்றும் கவனயீனமாக வாகனங்களை செலுத்துவதாகும்.
ஞாயிறன்று இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்த ஐவரில் மூவர் பாதசாரிகளாவர். எனவே வீதிகளில் நடந்து செல்பவர்கள் உள்ளிட்ட சகல நபர்கள் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்துகின்றோம்.
மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்களும், வீதிகளில் செல்பவர்கள் உள்ளிட்ட வேறு நபர்களும் அதிகளவில் உயிரிழக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளானால் படுகாயமடையக் கூடிய மற்றும் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM