நுவரெலியாவில் கடும் மழை ! மரக்கறி பயிர்கள் நாசம் ! பரிதவிப்பில் விவசாயிகள் !

Published By: Digital Desk 2

30 Oct, 2021 | 11:54 AM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள இரசாயன உரத்தட்டுப்பாடு , கிருமி நாசினி தட்டுப்பாடு போன்ற காரணங்களினால் அதிக பிரதேசங்களில் உள்ள விவசாயிகள்  விவசாயத்தினை கைவிட்டு ஏனைய தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், இயற்கையின் சீற்றமும் விவசாயிகளை விட்டு வைக்கவில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் விவசாயிகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் அடை மழையினால் விவசாய நிலங்களில் வெள்ளம் நிரம்பியுள்ளதால் பயிர்கள் அனைத்தும் நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உரம் ,கிருமிநாசினிகளை அதிக விலைக்கு வாங்கி விவசாயத்தை கை விடாமல் பாதுகாத்து வந்து நுவரெலியா , பொரலாந்த , கந்தபளை போன்ற பகுதிகளில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் தங்களது பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக அப்பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

குறித்த பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ள நீர் நிரம்பியதால் பல ஏக்கர் விவசாய காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மரக்கறி உற்பத்திகள் பாரிய சேதமடைந்துள்ளன. 

அதேவேளை தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா இராகலை பிரதான வீதியில் கல்பாலம் கோட்லோஜ் சந்தியில் வெள்ளநீர் நிரம்பியதால் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண மட்டத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவு...

2025-01-13 18:22:40
news-image

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்

2025-01-13 18:31:43
news-image

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட...

2025-01-13 17:16:39
news-image

மருந்துகள் கொள்வனவு தொடர்பில் கொள்முதல் ஆணைக்குழுவுடன்...

2025-01-13 18:02:21
news-image

இலங்கை மருத்துவ சங்கத்தின் 131வது தலைவராக...

2025-01-13 18:18:35
news-image

நண்பனின் தந்தையின் வங்கி இலத்திரனியல் அட்டையை...

2025-01-13 18:06:54
news-image

பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட...

2025-01-13 17:45:25
news-image

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும் - ஆளுநர்...

2025-01-13 17:47:46
news-image

சுதந்திரபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம்...

2025-01-13 18:36:20
news-image

வவுனியாவில் பொங்கலுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதில்...

2025-01-13 17:11:01
news-image

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதில் எனக்கு...

2025-01-13 16:54:19
news-image

ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முண்டியடித்த பாராளுமன்ற...

2025-01-13 16:46:34