நுவரெலியாவில் கடும் மழை ! மரக்கறி பயிர்கள் நாசம் ! பரிதவிப்பில் விவசாயிகள் !

Published By: Digital Desk 2

30 Oct, 2021 | 11:54 AM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள இரசாயன உரத்தட்டுப்பாடு , கிருமி நாசினி தட்டுப்பாடு போன்ற காரணங்களினால் அதிக பிரதேசங்களில் உள்ள விவசாயிகள்  விவசாயத்தினை கைவிட்டு ஏனைய தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், இயற்கையின் சீற்றமும் விவசாயிகளை விட்டு வைக்கவில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் விவசாயிகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் அடை மழையினால் விவசாய நிலங்களில் வெள்ளம் நிரம்பியுள்ளதால் பயிர்கள் அனைத்தும் நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உரம் ,கிருமிநாசினிகளை அதிக விலைக்கு வாங்கி விவசாயத்தை கை விடாமல் பாதுகாத்து வந்து நுவரெலியா , பொரலாந்த , கந்தபளை போன்ற பகுதிகளில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் தங்களது பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக அப்பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

குறித்த பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ள நீர் நிரம்பியதால் பல ஏக்கர் விவசாய காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மரக்கறி உற்பத்திகள் பாரிய சேதமடைந்துள்ளன. 

அதேவேளை தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா இராகலை பிரதான வீதியில் கல்பாலம் கோட்லோஜ் சந்தியில் வெள்ளநீர் நிரம்பியதால் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38