நுவரெலியாவில் கடும் மழை ! மரக்கறி பயிர்கள் நாசம் ! பரிதவிப்பில் விவசாயிகள் !

Published By: Digital Desk 2

30 Oct, 2021 | 11:54 AM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள இரசாயன உரத்தட்டுப்பாடு , கிருமி நாசினி தட்டுப்பாடு போன்ற காரணங்களினால் அதிக பிரதேசங்களில் உள்ள விவசாயிகள்  விவசாயத்தினை கைவிட்டு ஏனைய தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், இயற்கையின் சீற்றமும் விவசாயிகளை விட்டு வைக்கவில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் விவசாயிகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் அடை மழையினால் விவசாய நிலங்களில் வெள்ளம் நிரம்பியுள்ளதால் பயிர்கள் அனைத்தும் நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உரம் ,கிருமிநாசினிகளை அதிக விலைக்கு வாங்கி விவசாயத்தை கை விடாமல் பாதுகாத்து வந்து நுவரெலியா , பொரலாந்த , கந்தபளை போன்ற பகுதிகளில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் தங்களது பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக அப்பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

குறித்த பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ள நீர் நிரம்பியதால் பல ஏக்கர் விவசாய காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மரக்கறி உற்பத்திகள் பாரிய சேதமடைந்துள்ளன. 

அதேவேளை தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா இராகலை பிரதான வீதியில் கல்பாலம் கோட்லோஜ் சந்தியில் வெள்ளநீர் நிரம்பியதால் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 608...

2026-04-20 10:11:35
news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:37:10
news-image

அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை:...

2026-04-20 09:46:40
news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14