(எம்.மனோசித்ரா)
நாட்டில் அண்மைய நாட்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், சுகாதார தரப்பிற்கு கிடைக்கப் பெறும் தகவல்களுக்கமைய மேலும் சில மாதங்களில் கொவிட் தொற்றானது மீண்டும் அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
எனவே இந்த நிலைமையை புரிந்துகொண்டு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்தார்.
கொவிட் தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை மற்றும் தற்போதைய கொவிட் நிலைவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டம் கடந்த 5 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனூடாக குறித்த 5 மாதங்களுக்குள் ஒரு இலட்சத்து 1152 கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 95,436 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். வீடுகளிலேயே சிகிச்சையளிப்பதற்கு தெரிவுசெய்யப்பட்ட தொற்றாளர்களில் சுமார் 1.5 சதவீதமானோரே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது 3,701 தொற்றாளர்கள் இதே முறைமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் காணப்பட்ட தொற்றாளர்களை விட தற்போது சடுதியான வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கு கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், தென்படாவிட்டாலும் எம்மால் முன்னெடுக்கப்படுகின்ற வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும்.
1390 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தம்மை பதிவு செய்துகொள்ள முடியும்.
அண்மைய நாட்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், சுகாதார தரப்பிற்கு கிடைக்கப் பெறும் தகவல்களுக்கமைய மேலும் சில மாதங்களில் கொவிட் தொற்றானது மீண்டும் அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது.
எனவே இந்த நிலைமையை புரிந்துக்கொண்டு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM