மன்னாரில் அனுமதியின்றி இரவு நேர கடல் அட்டை பிடித்தலில் ஈடுபட்ட 3 மீனவர்கள் கைது

Published By: Digital Desk 4

28 Oct, 2021 | 10:32 PM
image

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி இரவு நேர கடல் அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3  மீனவர் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளனர்.

நேற்று புதன்கிழமை (27)  இரவு  குறித்த 3 மீனவர்களும் படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று அட்டை பிடித்த நிலையில்  இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  3 மீனவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ,453 கடல் அட்டைகள், படகு இயந்திரம், அட்டை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி, சப்பாத்து என்பன மன்னார் கடற்தொழில் திணைக்கள  அதிகாரிகளிடம் இன்று வியாழக்கிழமை காலை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

 குறித்த 3 மீனவர்களிடம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை  மேற்கொண்ட நிலையில் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரத்திற்கு அமைவாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் மூவரும் இன்று வியாழக்கிழமை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 இவர்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 453 கடல் அட்டைகள் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டது.

கடல் அட்டை தொழில் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை மட்டுமே கடற்பரப்பில் அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கடல் அட்டைகளின் உள்ளூர் சந்தை மதிப்பு ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் என கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28