உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ விசாரணைகள் குறித்து அரசாங்கம் மீது குற்றம் சுமத்த முடியாது - சரத் வீரசேகர

Published By: Digital Desk 3

27 Oct, 2021 | 05:37 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் மீதும் பொலிஸ் மீதும் குற்றஞ்சாட்ட முடியாது. 

விசாரணை நடவடிக்கைகள் தொடர்பிலான அனைத்து அறிக்கைகளும் சட்டமாதிபர் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (26)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

விசாரணை அறிக்கைகள் சட்டமாதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 5 மேல் நீதிமன்றங்களில் 9 வழக்கு இடம்பெறுவதுடன்,

24பேருக்கு எதிராக  குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஆகவே குண்டுத்தாக்குதல் சம்பவம்தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அலல்து பொலிஸிற்கு எதிராக குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பொலிஸ் தரப்பிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அனைத்து விசாரணை அறிக்கைகளையும் சட்டமாதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளேன். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சட்டமாதிபர் முன்னெடுக்க வேண்டும்.

குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.குற்றத்துடன் தொடர்புடையவர்களை தண்டிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றிற்கு உண்டு. 

விசாரணைகள் அரசியல் தலையீடுகளின்றி சுயாதீனமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது மக்கள் அச்சமில்லாமல் வாழும் சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வியாபாரத்தை இல்லாதொழிக்க பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17