இந்திய மீனவர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு - அரசாங்கம் அவதானம்

Published By: Gayathri

26 Oct, 2021 | 04:08 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் விவகாரத்தில் இரு அரசுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் சுமுகமாக பேணும் அதேவேளை, பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதிலும் அரசாங்கம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகிறது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்தல் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகிறது. 

அத்தோடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி வருகின்றார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்குமிடையிலான கடல் எல்லைகள் கற்பனையால் வரையறுக்கப்பட்டதாகவே காணப்படுகிறது. 

எனவே தான் சில சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினை ஆக்கிரமிக்கின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் தீவிர அவதானம் செலுத்தும்.

இதன்போது பாதிக்கப்படும் மீனவர்களுக்கு உதவி வழங்கும் அதேவேளை, இரு அரசுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் சுமூகமாக பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் செயற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04