இந்திய உரம் இறக்குமதியில் மோசடி இல்லை ; ரமேஷ் பத்திரண

Published By: Digital Desk 3

26 Oct, 2021 | 01:02 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியாவிலிருந்து திரவ நனோ நைட்ரஜன் உரம் இறக்குமதி விவகாரத்தில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை. எனவே இறக்குமதி செய்யப்பட்ட உரத்தின் விலை உள்ளிட்ட விடயங்கள் குறித்த உண்மை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் பாரிய பண மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போது அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பசுமை விவசாயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற் கொண்டாகும். 

எனினும் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய கால மற்றும் நீண்ட கால சிக்கல்கள் காணப்படுகின்றமையை ஏற்றுக் கொள்கின்றோம்.

நைட்ரஜன் உரத்தினை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் , அதன் தரம் தொடர்பில் ஏற்பட்ட சிக்கலால் அதனை நிராகரிக்க நேரிட்டது. 

இதனால் விவசாயிகள் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வினை வழங்குவதற்காகவே திரவ நனோ நைட்ரஜன் உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56
news-image

பாணந்துறையில் இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலம்...

2023-05-29 17:28:53
news-image

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் குறித்து அரச...

2023-05-29 17:35:29
news-image

கிளிநொச்சி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உணவுபாதுகாப்பின்மை...

2023-05-29 17:43:41
news-image

ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை...

2023-05-29 16:40:54
news-image

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு...

2023-05-29 16:28:23
news-image

சம்மாந்துறைக்கும் சோமாவதிக்கும் சென்ற இரு வேன்கள்...

2023-05-29 16:17:42
news-image

கைதான இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2023-05-29 16:12:12