( எம்.நியூட்டன்)
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக யாழ் குருநகர் மீனவர்கள் கறுப்பு கொடிகட்டி ஹர்த்தால் அனுஸ்டித்த துடன் கொடும்பாவியையும் எரித்தனர்

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், உள்ளூர் இழுவை மடி தொழில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்துக்கு எதிராகவே குருநகர்,வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு கூடியிருந்தவர்களால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது டன் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டது

இந்த போராட்டத்தின்போது கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது இது தமிழ் கட்சிகளுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமோ அல்ல என்றும் இது தனி மனிதனுக்கு எதிரான போராட்டம்.பலபேருக்கு வாழ்வளிக்கும் இழுவை மடி தொழிலை முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக் கோருவது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எனவும் கருத்து தெரிவித்தனர்.
குருநகர் மீனவர்கள் நேற்று தொழிலுக்குச் செல்லாமல்ஹர்த்தால் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM