( எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான நுகேகொடை நீதிவான் நீதிமன்ற வழக்கை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது.
இதற்காக நீதிவான் பி /299/2020 எனும் குறித்த வழக்கை விசாரிப்பதை தடுக்கும் 'புரோஹிபிஷன் ரிட்' (Writ of Prohibition) எனப்படும் ஒரு நீதிமன்றம் தன் அதிகாரத்தை மீறி செயற்படாதவாறு பிறப்பிக்கப்படும் தடை நீதிப் பேராணையையும் மேன் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அத்துடன், குறித்த வழக்கில் 2 ஆவது சந்தேக நபராக நீதிபதி கிஹான் பிலபிட்டியவை பெயரிட்ட சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் வலுவிழக்கச் செய்து மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபராக தன்னை பெயரிட்டு இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
அது குறித்த விசாரணைகளின் நிறைவில், மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி சோபித்த ராஜகருணா, நீதிபதி தம்மிக கனேபொலவின் இணக்கத்துடன் மேற்படி 8 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பினை வழங்கினார்.
இந்த ரிட் மனுவில் நுகேகொடை நீதிவான் மொஹம்மட் மிஹால் ( தற்போது மேல் நீதிமன்ற நீதிபதி), சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரம ரத்ன அகையோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர். அரசியலமைப்பின் 140 ஆம் உறுப்புரைக்கு அமைய மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மனுதாரரான நீதிபதி கிஹான் பிலபிட்டிய சார்பில் சட்டத்தரணிகளான சுதத் கல்தேரா, நிரான் அங்கிடெல் ஆகியோருட்ன் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியிருந்தார்.
2 ஆம் பிரதிவாதியான சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சஹீதா பாரியும் 3 ஆம் பிரதிவாதி பொலிஸ் மா அதிபருக்காக சட்டத்தரனி கருணாரத்னவுடன் ஜனாதிபதி சட்டத்தரனி உதித்த இகலஹேவாவும் ஆஜராகியிருந்தனர்.
இந் நிலையில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிராக போதுமான சாட்சிகள் எதுவும் இல்லை என பொலிஸ் மா அதிபர் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு கடந்த 15 ஆம் திகதி அறிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, இதனை வெளிப்படுத்தினார்.
இவ்வாறான பின்னனியிலேயே குறித்த வழக்கின் தீர்ப்பினை அறிவித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை விதித்து தீர்ப்பளித்தது.
முன்னதாக கடந்த 2020 ஜூன் 08 ஆம் திகதி, நீதிவான் நீதிமன்ற விசாரணைகளுக்கு இடைக்கால தடை மேன் முறையீட்டு நீதிமன்றால் விதித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM