சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மேல்மாகாணத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகையிரத பயணிகள் பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட வேண்டும் என கொவிட்தடுப்பு ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்கியுள்ளது.

ஆகவே பருவகால அட்டை இல்லாதவர்கள் புகையிரத சேவையை பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு விநியோகிக்கப்படமாட்டாது.

ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர்மாத காலங்களில் விநியோகிக்கப்பட்ட பருவகால சீட்டு (சீசன்)இம்மாதம் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும்.

இந்நிலையில் பருவகால அட்டைக்கு அமைய பயணிகள் புகையிர சேவையினை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வெறிச்சோடிய இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
(படப்பிடிப்பு - தினேத் சமல்க)


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM