எம்.எஸ்.தீன்
“முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின்தலைவர்கள் ஒரு திசையிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னுமொரு திசையிலும் தொடர்ந்தும்அரசியல் செய்ய முடியாது”
மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்தியாவின் அழுத்தம்கிடையதென்று தெரிவித்துக் கொண்டாலும், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் இந்தியாஅழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மையாகும்.
இந்நிலையில் அரசியல் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலுக்குரிய ஆயத்தங்களில்ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளும் இத்தகைய நிலையிலேயே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் செய்திருந்தார்.
கட்சிக்குள் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஒரு சில உயர்பீடஉறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் ஆதரவாளர்களிடையே எத்தகைய தாக்கத்தைஏற்படுத்தியுள்ளது என்பதனை இந்த விஜயத்தின் போது அறிந்து கொள்வதனையும் ரவூப் ஹக்கீம்நோக்கக் கொண்டிருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களின்நடவடிக்கைகளில் அதிருப்பியுடன் இருப்பதனை அறிந்து கொண்டார்.
முஸ்லிம் கட்சிகளை பொறுத்தவரை தேசிய பேரினவாதக் கட்சிகளைப் போன்று செயற்படமுடியாது. தேசிய பேரினவாதக் கட்சிகளின் நடவடிக்கைகளில் பெரிய வேறுபாடுகளை காண முடியாது.அக்கட்சிகள் பௌத்த சிங்களவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்காக சட்ட விதிகளைக் கூட அக்கட்சிகள் மீறிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.ஆனால், சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம்கட்சிகள் அவ்வாறு செயற்பட முடியாது. தற்போது பெரும்பாலும் சிறுபான்மையினக் கட்சிகள்தேசிய பேரினவாதக் கட்சிகளோடு இணைந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-24#page-20
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM