(எம்.எப்.எம்.பஸீர்)
இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பசளைக்கான கொடுப்பனவான 29 கோடி ரூபா பணத்தை தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிமாற்றுவதற்கு அழுத்தம் விடுத்ததாக வார இறுதி பத்திரிகையொன்றில் வெளியான செய்தி தொடர்பில், அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரிடம் சி.ஐ.டி. விசாரணை நடாத்தியுள்ளது.
![]()
சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல வார இறுதி பத்திரிகை ஆசிரியருமான மஹிந்த இலேபெறுமவிடம், நேற்று சி.ஐ.டி. சிறப்புக் குழு விசாரணை நடாத்தி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது.
குறித்த பத்திரிகை செய்தியை ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர முழுமையாக நிராகரித்துள்ள நிலையில், அந்த செய்தி தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பூரண விசாரணை நடத்துமாறு , பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
அதன்படியே அது குறித்த விசாரணைகள் உடனடியாக சி.ஐ.டி.யினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படியே பத்திரிகை குறித்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவிடமிருந்து நனோ நைட்ரஜன் யூரியா திரவ பசளை இறக்குமதியின் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்ற அமர்வின் போது சில விடயங்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்தே இன்று 24 ஆம் திகதியிடப்பட்ட வாராந்த சிங்களப் பத்திரிகை, ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர்வை அதனுடன் இணைத்து வெளிப்படுத்தல் ஒன்றினை முன் வைத்திருந்தது. இந் நிலையிலேயே தற்போது அது பெரும் சர்ச்சைகலை ஏற்படுத்தியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM