சரித்த அசலங்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான இபதுக்கு - 20 போட்டியில் 5 விக்கெட்டுகளால் இலங்கை அபார வெற்றியைப் பெற்றது.
2021 ஐ.சி.சி. ஆண்கள் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத்தில் நீண்ட தூர போராட்டத்தின் பின்னர் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்த இலங்கை அணி இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி இன்று பிற்பகல் ஷார்ஜாவில் இடம்பெற்றது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணியில் துடுப்பாட்டத்தில் மொஹமட் நயிம் 62 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ மற்றும் லகிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பம அதிர்ச்சி காத்திருந்தது. அணி 2 ஓட்டங்களை பெற்றிருந்தபோது முதலாவது விக்கெட்டுக்காக குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்நிலையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை ஒருகட்டத்தில் 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து இலங்கை அணியின் சரித்த அசலங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் 172 என்ற வெற்றி இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இலங்கை அணி சார்பில் சரித்த அசலங்க ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில் நசும் அஹமட் மற்றும் சகிப் அல்ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சைபுதீன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சரித்த அசலங்க தெரிவு செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM