ரோயல் -  தோமியன் கல்லூரி அணிகளின் 'நீலங்களின் சமர்' மாபெரும் கிரிக்கெட் போட்டியை நடத்த தீர்மானம்

Published By: Digital Desk 2

23 Oct, 2021 | 08:16 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடவைகள் பிற்போட்டுவந்த கொழும்பு ரோயல் மற்றும் கல்கிஸ்ஸை சென்.தோமஸ் கல்லூரிகளின் நீலங்களின் சமர் என வர்ணிக்கப்படும் மா பெரும் கிரிக்கெட் போட்டியை (BIG MATCH) நடத்த போட்டி ஏற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி 142 ஆவது தடவையாக நடத்தப்படவுள்ள ரோயல்- தோமியன் மாபெரும் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 28 ஆம்,29ஆம், 30 ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்.எஸ்.சீ. கிரிக்கெட் மைதானத்தில் நடத்த போட்டி ஏற்பாட்டு குழு தீர்மானித்துள்ளது.

நீலங்களின் சமர் போட்டியானது இவ்வாண்டின் மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே மாதத்துக்கு பிற்போடப்பட்டது. எவ்வாறாயினும், மே மாதத்தின்போதும் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து காணப்பட்டதால், திகதி குறிப்பிடப்படாது பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலைமை சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளமை காரணமாக உலகின் நீண்ட காலமாக  தொடர்ச்சியாக நடத்தப்படும் போட்டி என்றதன் காரணமாக பார்வையாளர்கள் எவருமின்றி இப்போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கல்லூரிகள்  பங்குகொள்ளும் 'நீலங்களின் சமர்'  மா பெரும் கிரிக்கெட் போட்டியானது  உலகின் மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் மா பெரும் கிரிக்கெட் போட்டியாக விளங்கிறது. இந்த  நீலங்களின் சமர் போட்டியானது, அவுஸ்திரேலியாவின் சென்.பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் பிரின்ஸ் அல்பிரெட் கல்லூரிகளின் கிரிக்கெட் போட்டிக்கு அடுத்ததாக உலகின் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியாகும். 

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 142 ஆவது 'நீலங்களின் சமர்'  போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.தோமஸ் அணி தமது முதல் இன்னிங்ஸில் 128.2 ஓவர்களில் சகல விக்‍கெட்டுக்களையும் இழந்து 369 ஓட்டங்களை பெற்றது. இதில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடியிருந்த ரோயல் அணி 104.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டத்தை இடைநிறுத்தியது. 

இதைத் தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய  சென்.தோமஸ் அணி 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டம் நிறைவுக்கு வந்தது. 

எனினும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீலங்களின் சமரில் சென்.தோமஸ் அணி வெற்றி பெற்றிருந்தமையால் தொடர்ந்தும் வெற்றிக் கிண்ணம் அவர்கள் வசமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59