கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் 7 ஆம் ஒழுங்கை கடந்த வருடம் ஏழாம் மாதம் தார் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.
நிறைந்த கிராமம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலகததினால் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தொழிநுட்ப மேற்பார்வையில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
வீதி புனரமைப்புக்கான ஒப்பந்தத்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பெற்றிருந்தாலும் வீதி புனரமைப்பு பணிகளை தனியார் ஒப்பந்தகாரர் ஒருவர் மேற்கொள்வதற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் அனுமதி வழங்கியிருந்திருந்தது.
எனவே குறித்த வீதியின் பணிகள் கடந்த வருடம் ஏழாம் மாதம் நிறைவுப்பெற்றிருந்தது. ஒப்பந்த காலத்தில் புனரமைப்பு பணிகளின் தொழிநுட்ப மேற்பார்வை மற்றும் கொடுப்பனவுகளுக்கான சிபார்சுகளை கரைச்சி பிரதேச சபையே மேற்கொண்டிருந்தது. ஆனால் குறித்த வீதியின் தரமற்ற புனரமைப்பு காரணமாக ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமுற்று பொது மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.
எனவே இது தொடர்பில் பிரதேச பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, மேற்பார்வை மற்றும் தொழிநுடப் கண்காணிப்பினை மேற்கொண்ட கரைச்சி பிரதேச சபையின் மீதும் தங்களது விசனத்தை தெரிவித்துள்ளனர். முறைகேடனான அபிவிருத்திப் பணிகளை கண்டுகொள்ளதாக திணைக்களங்கள் மீதும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM