உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் திகதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1981இல், இத்தினம் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து அமைதி நிலவ, ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் அனைத்து துறைகளிலும் போட்டி போடுகின்றன.
இந்த போட்டி ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது.
மாறாக சில நாடுகள், ஏனைய நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன் செயல்படுகிறன.
சில நாடுகளில் பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது. உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது ஒட்டு மொத்த உலக நாடுகளின் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
அனைத்து நாடுகளும் தங்களுக்கிடையே உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும்.
மாறாக வன்முறையை தேர்ந்தெடுத்தால், பிரச்னையும் தீராது, நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், அமைதியான உலகை உருவாக்கலாம்.
நெல்சன் மண்டேலா - முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி
எதிரியுடன் நீங்கள் அமைதியை பேண வேண்டுமெனில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். பின் அவர்கள் உங்களது கூட்டாளியாகி விடுவார்கள். :
ஆல்பர் ஐன்ஸ்டீன் -அறிவியலாளர்
அமைதி என்பது கட்டாயத்தினால் ஏற்படுத்த முடியாது ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல் மூலமே ஏற்படும்.
மார்டின் லூதர் கிங்- சமூக உரிமை போராளி
இருளை இருளால் போக்க முடியாது, ஒளி தான் இருளை போக்கும். அதே போல வெறுப்புணர்வை வெறுப்பால் போக்க முடியாது, அன்பால் தான் முடியும்.
'புனிதர்' அன்னை தெரசா
புன்னகையில் தொடங்குகிறது அமைதி
பான் கி மூன்- ஐ.நா., பொதுச் செயலாளர்
அமைதி என்பது விபத்தல்ல்
அமைதி நன்கொடை அல்ல
அமைதி ஏற்பட ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாடும் பணியாற்ற வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM