திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் : விரட்டியடிக்கப்பட்ட காணி ஆணையாளர் - மட்டக்களப்பில் சம்பவம்

Published By: Gayathri

22 Oct, 2021 | 06:57 AM
image

மட்டக்களப்பு-வாகரை காரமுனையில் திட்டமிட்ட வெளி மாவட்ட சிங்கள மக்களை மிகவும் இரகசியமான முறையில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் குடியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் வியாழக்கிழமை (21.10.2021) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 பேருக்கு காணி வழங்குவதற்கு இன்று காலை புனானை வனவிலங்கு திணைக்கள கட்டிடத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இணைந்து குறித்த காணி வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

புனானையில் காணி தொடர்பாக தகவல் பதிவுசெய்யப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு காரமுனைக்கு தங்களது இடங்களை காண்பிக்க சென்றபோது ஆணையாளருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஆர்ப்பாட்டமாக மாறியிருந்தது.

இதன்போது அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை உடன் நிறுத்தக்கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஆணையாளர் குறித்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கம் சார்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்தபோதும் ஒருவர் இந்தியாவிலும் மற்றவர் கொழும்பிலும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சிங்கள குடியேற்றம் திட்டமிட்டு இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 10:21:57
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02
news-image

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு...

2025-01-25 09:36:14
news-image

ஜனாதிபதி கீழ் நிலைக்கு செல்வாரென்று எதிர்பார்க்கவில்லை...

2025-01-25 08:43:57
news-image

இன்றைய வானிலை

2025-01-25 06:22:41