அரசாங்கத்தின் வெறுப்புப்பேச்சே ஆசிரியர் - அதிபர்களின் போராட்டம் தீவிரமடையக் காரணம் - சந்திம வீரக்கொடி

Published By: Digital Desk 2

21 Oct, 2021 | 02:47 PM
image

இராஜதுரை ஹஷான்

பலவந்தமான முறையில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர முடியாது. தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே ஆசிரியர்-அதிபர் சேவைக்கு குறைந்தளவு மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

அரசாங்கத்தின் ஒரு சில உறுப்பினர்களது வெறுக்கத்தக்க பேச்சுக்கள் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் 200இற்கும் குறைவா மாணவர்களை கொண்ட  பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறந்து கல்வி துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர்செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைக்கும் கோரிக்கை நியாயமானது.சுமார் 24 வருடகாலமாக சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தீர்வு காண முயற்சித்த போதும்,அம் முயற்சிகள் வெற்றிப் பெறவில்லை.

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை ஆளும் தரப்பில் உள்ள ஒரு சில உறுப்பினர்கள் தான் தீவிரப்படுத்தினார்கள்.

ஆசிரியர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை குறிப்பிட்டு ஆசிரியர்-அதிபர்களுக்கு உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். 

தற்போதும் தேவையற்ற கருத்துக்களை அரசியல் அனுபவமில்லாத பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகநீதி உலகரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 11:43:47
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10
news-image

செவ்வாயன்று இலங்கைக்கு மங்களகரமான செய்தி கிடைக்கும்...

2023-12-10 11:22:31
news-image

கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு...

2023-12-10 10:59:03
news-image

மஹாநாயக்க தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம்...

2023-12-09 21:05:21
news-image

தமிழரசின் தலைமைக்கு மும்முனையில் போட்டி

2023-12-09 20:44:27
news-image

முக்கிய சந்திப்புக்களை நடத்தும் உலகத் தமிழர்...

2023-12-09 20:54:30
news-image

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில்...

2023-12-10 09:52:53
news-image

கொழும்பில் இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்கும் சந்தோஷ்...

2023-12-10 11:32:10