இரு தினங்களுக்கு பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு

Published By: Digital Desk 4

20 Oct, 2021 | 08:49 PM
image

( எம்.நியூட்டன்)

வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் சேவைப் புறக்கணிப்பை முன்னெடுக்க வேண்டும் என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் தீலீசன் தெரிவித்தார்.

Articles Tagged Under: இலங்கை ஆசிரியர் சங்கம் | Virakesari.lk

இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசியல்வாதிகளுடனும் அரசோடும் சேர்ந்து இயங்குகின்ற ஒரு சில அமைப்புகளும் சங்கங்களும் 21 ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதென அறிவித்திருந்தாலும் அதிபர்களும், ஆசிரியர்களும் எங்கள் உரிமைக்காக சேவையைப் புறக்கணித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையிலே நாளையும், நாளை மறுதினமும்,   அதிபர்கள் ஆசிரியர்கள் விடுமுறையை அறிவிக்காமல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எந்தவித அச்சமுமின்றி  இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். கடமைக்கு சமூகமளிக்காவிடின் சம்பளத்தை நிறுத்துவோமென கூறினாலும் அவற்றை சட்ட ரீதியாக செயற்படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சேவைப் புறக்கணிப்பு நடைபெறும் பொழுது அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக எந்த சிவில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது அரசு, ஆசிரியர் அதிபர்களோடு தொடர்புபடாத யாரை வைத்து பாடசாலைகளை ஆரம்பித்தாலும் பாடசாலைக்குச் செல்லாத இடத்தில் எந்த விதமான பாதிப்புக்களும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஏற்படப் போவதில்லை என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறிக் கொள்கிறோம்.

இந்த இடத்திலேயே 21ம் 22ம் திகதிகளில் சேவைப் புறக்கணிப்பை மேற்கொண்டு 25ஆம் திகதி நாங்கள் பாடசாலைக்கு செல்ல தயாராகவுள்ளோம்.

அரசு பல்வேறு விதமான கபட நாடகங்களை மேற்கொண்டு ஆசிரியர்கள், அதிபர்களுக்கு எதிராக சமூகத்தை திருப்பும் வகையிலே செயற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த அரசு, பெற்றோர் மாணவர்கள் உடன் அதிபர்கள், ஆசிரியர்களை மோதவிட்டு பிரச்சனையை திசை திருப்பலாம் என்று சிந்திக்கின்ற நிலையில் தொழிற்சங்க ரீதியாக நாங்கள் முடிவு எடுத்து அரசு அறிவித்த திகதிகளில் பாடசாலைக்குச் செல்லாமல் மாணவர்களின் கல்வியை வழங்கும் நோக்கில் எங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 25-ந்திகதி பணிக்குச் செல்வோம்.

21,22ம் திகதிகளில் மாணவர்களை பாடசாலைக்கு செல்வது எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இருக்காது. 25ஆம் திகதி நாங்களாக பாடசாலைக்கு வரும் போது உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள். நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தல் செயற்பாடுகளை செய்ய தயாராக இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30