மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு பாடசாலைகளை ஆரம்பிக்க எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது  கல்வி அமைச்சு

Published By: Digital Desk 4

20 Oct, 2021 | 08:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டதன் மூலம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கோ ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருவதற்கோ எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால், பாடசாலைகளை ஆரம்பிப்பதில் பாதிப்பு ஏற்படுமா என வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள்ள வந்திருக்கின்றதால், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த மாதத்தில் இருந்து நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.

அதன் பிரகாரம் சுகாதார வழிகாட்டல்களுடன் முதற் கட்டமாக 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நாளை  21ஆம் திகதி 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

அத்துடன் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடும் 21 ஆம் திகதி வரையே இருந்தது. என்றாலும் தற்போது அந்த கட்டுப்பாடு 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருக்கின்றது.

என்றாலும் 200 மாணவர்களுக்கு குறைவான அதிக பாடசாலைகள் கிராம பிரதேசங்களிலேயே இருக்கின்றன. அதனால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டிருப்பது, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கோ அல்லது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருவதற்கோ பாதிப்பு ஏற்படாது.

மாகாணங்களை கடந்து வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றது. அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் நாளைய தினம் 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மாத்திரமே ஆரம்பிக்கப்படுகின்றன. அதனைத்தொடந்து கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் தரம் 5 புளமைப்பரிசில் வகுப்புகளை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-27 09:20:40
news-image

யாழ். பொலிகண்டி பகுதியில் 38 கஞ்சா...

2025-03-27 09:41:50
news-image

குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட...

2025-03-27 09:18:09
news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53