(எம்.மனோசித்ரா)
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற மிக உயரிய பரிசாக பௌத்தம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ , இரு நாட்டு மக்களிடையிலான உறவு வலுவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் - உத்தரமாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற போது , அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற மிக உயரிய பரிசாக பௌத்தம் காணப்படுகிறது. இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகள் மிக வேகமாக நாளுக்கு நாள் வளர்கிறது.
இரு நாட்டு பௌத்த உறவுகளை வலுப்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய நிதியுதவியை இந்த இடத்தில் நினைகூர விரும்புகின்றேன். அசோக மன்னனின் புதல்வரான இளவரசர் மஹிந்த எமது இரு நாடுகளுக்கும் முக்கிய பங்களிப்புக்களை செய்துள்ளார்.இதன் பாரம்பரிய வளர்ச்சியாக இலங்கையில் ஒரு புதிய பௌத்த கலாசாரம் உருவெடுத்ததுடன் ஒரு அமைதியான சூழலையும் மக்கள் மத்தியில் உருவாக்கிறது. இன்று மீண்டுமொரு வரலாற்று மைல் கல்லாக இந்த விமான நிலைய திறப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும் பகவத் கீதையினை மொழி பெயர்ப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்திருந்தார். அதன் முதல் பிரதிகளை விரைவில் வழங்கி வைக்கவுள்ளேன்.
இலங்கை மக்கள் மாத்திரமல்லாது உலகவாழ் மக்களுக்கும் குஷிநகருக்கு வருகை தந்து பௌத்த பெருமைகளை கண்டறிய முடியும். இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறுகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM