இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கிடைத்த மிக உயரிய பரிசு பௌத்தம் - அமைச்சர் நாமல் பெருமிதம்

Published By: Digital Desk 3

20 Oct, 2021 | 04:31 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற மிக உயரிய பரிசாக பௌத்தம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ , இரு நாட்டு மக்களிடையிலான உறவு வலுவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் - உத்தரமாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற போது , அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற மிக உயரிய பரிசாக பௌத்தம் காணப்படுகிறது. இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகள் மிக வேகமாக நாளுக்கு நாள் வளர்கிறது.

இரு நாட்டு பௌத்த உறவுகளை வலுப்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய நிதியுதவியை இந்த இடத்தில் நினைகூர விரும்புகின்றேன். அசோக மன்னனின் புதல்வரான இளவரசர் மஹிந்த எமது இரு நாடுகளுக்கும் முக்கிய பங்களிப்புக்களை செய்துள்ளார்.இதன் பாரம்பரிய வளர்ச்சியாக இலங்கையில் ஒரு புதிய பௌத்த கலாசாரம் உருவெடுத்ததுடன் ஒரு அமைதியான சூழலையும் மக்கள் மத்தியில் உருவாக்கிறது. இன்று மீண்டுமொரு வரலாற்று மைல் கல்லாக இந்த விமான நிலைய திறப்பு இடம்பெற்றுள்ளது.

மேலும் பகவத் கீதையினை மொழி பெயர்ப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்திருந்தார். அதன் முதல் பிரதிகளை விரைவில் வழங்கி வைக்கவுள்ளேன்.

இலங்கை மக்கள் மாத்திரமல்லாது உலகவாழ் மக்களுக்கும் குஷிநகருக்கு வருகை தந்து பௌத்த பெருமைகளை கண்டறிய முடியும். இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறுகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50