”ஆப்கானின் தற்போதைய நிலைவரங்கள் இலங்கையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்”

Published By: Digital Desk 2

20 Oct, 2021 | 04:35 PM
image

நா.தனுஜா

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரங்கள் இலங்கையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

 குறிப்பாக ஆப்கானிஸ்தானின் நிலைவரங்கள் இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று அஷ்ரப் ஹைதாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி 'ஆப்கானிஸ்தானில் போதைப்பொருட்கள் உற்பத்திசெய்யப்படுவதுடன் அவை பிராந்திய ரீதியில் இயங்கும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களால் ஏனைய நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. 

இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய அரசாங்கங்களை வலுவிழக்கச்செய்யும் வகையிலான தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதியளிக்கும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இவற்றால் இலங்கை உள்ளிட்ட கடலால் சூழப்பட்ட நாடுகளுக்கு நெருக்கடிகள் ஏற்படக்கூடும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸுடனான சந்திப்பின்போதே ஆப்கானிஸ்தான் தூதுவர் இவ்விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.

அதேவேளை இஸ்லாமியக் குடியரசைப் புறக்கணிக்கின்ற, தோல்வியடைந்த 'டோஹா ஒப்பந்தம்' குறித்தும் இச்சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அஷ்ரப் ஹைதாரி, அவ்வொப்பந்தத்தின் தோல்வி உலகளாவிய ரீதியிலுள்ள தீவிரவாதக்குழுக்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். 

அத்தோடு இலங்கையில் இடம்பெற்றுவந்த நீண்டகாலப்போர் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டமையை குறித்து அவர் தனது பாராட்டையும் பகிர்ந்துள்ளார்.

 

மேலும் போரிலிருந்து சமாதானத்திற்கு நிலைமாற்றமடைவது குறித்து தெற்காசியாவின் மிகப்பழமையான ஜனநாயக நாடான இலங்கையிடமிருந்து ஆப்கானிஸ்தான் பல்வேறு விடயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றது என்றும் அஷ்ரப் ஹைதாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00