காசு மற்றும் நகைகளைத் தராவிட்டால் பெற்றோரை வெட்டுவேன் என்று மாணவன் ஒருவரை அச்சுறுத்தி காசு, நகை என்பவற்றை கப்பமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டில், அந்த மாணவனின் நண்பன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
நண்பன், முகநூலில் போலியான கணக்கு ஒன்றைத்திறந்து அந்த முகநூல் மூலம் 17வயதான அந்த மாணவனை அச்சுறுத்தியுள்ளார்.
இதற்கு பயந்த மாணவன் குறித்த சந்தேகநபர் கேட்ட பணத்தையும் நகையையும் அவர் சொன்ன இடத்துக்குக் கொண்டு சென்று வைத்துள்ளார். மாணவன் அந்த இடத்திலிருந்து சென்றபின்னா் சந்தேகநபர் நகை, பணம் என்பவற்றை எடுத்துச்சென்றார்.
இது தொடர்ந்து சிலநாட்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தநிலையில் நகைகளையும் பணத்தையும் தேடிய பெற்றோர் அவற்றைக் காணாது மகனிடம் வினவினர். உண்மையைமறைக்க முடியாத மாணவன், நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகநபரை இன்று கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் 3 மோதிரங்கள், 3 சங்கிலிகள், 3 வளையல்கள், ஒரு சோடி தோடு மற்றும் 2 இலட்சத்து பத்தாயிரம் ரூபா என்பவற்றை சந்தேகநபர் கப்பமாக வாங்கியதை ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில், குறித்த சந்தேகநபர் வேறு மோசடிகளிலும்ஈடுபட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM