ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவரவே பாடசாலைகளை திறப்பதில் அரசாங்கம் ஆர்வம் - ரோஹினி

Published By: Digital Desk 4

19 Oct, 2021 | 09:30 PM
image

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில், முதற்கட்டமாக ஆரம்ப மற்றும் கனிஷ்ட பாடசாலைகளை மீளத்திறப்பதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

எனவே அவற்றில் கல்விபயிலக்கூடிய 12 வயதிற்குக் குறைந்த மாணவர்களைக் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்டவாறு பாடசாலைகளைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மாணவர்களின் நலனை முன்னிறுத்தியது அல்ல.

மாறாக ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவிற்குக்கொண்டுவருவதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

தமது நலன்களை உறுதிசெய்துகொள்வதற்காக எந்தவொரு தரப்பினரையும் பலிகொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் செவ்வாய்கிழமை ( 19 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் முதற்கட்டமாக 200 இற்கும் குறைவான மாணவர்களைக்கொண்ட சுமார் 3800 பாடசாலைகளை மாத்திரமே 21 ஆம் திகதி மீளத்திறக்கவிருப்பதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இவற்றில் பெரும்பாலானவை ஆரம்பப்பிரிவு மற்றும் கனிஷ்ட பாடசாலைகளாகும். எனவே அவற்றில் கல்விகற்பவர்கள் 12 வயதிற்கும் குறைந்த மாணவர்களேயாவர்.

கொவிட் - 19 வைரஸ் தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? முதற்கட்டமாகப் பாடசாலைகளைத் திறப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல.

மாறாக ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவிற்குக்கொண்டுவருவதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

அரசாங்கம் அதன் நலன்களை உறுதிசெய்துகொள்வதற்காக எந்தவொரு தரப்பினரையும் பலிகொடுப்பதற்குத் தயாராக இருப்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43