ரஞ்சன் விவகாரம் : நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிராக போதிய சாட்சிகளில்லை : விடுவிப்பதா இல்லையா என்ற உத்தரவு ஒக்டோபர் 25 இல்

16 Oct, 2021 | 10:37 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில்,  மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிராக போதுமான சாட்சிகள் எதுவும் இல்லை என பொலிஸ் மா அதிபர் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு  அறிவித்துள்ளார்.

 பொலிஸ் மா அதிபர் சார்பில்  மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, இதனை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து மனுதாரரான நீதிபதி கிஹான் பிலபிட்டிய சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா,  விசாரணையில் எந்த சாட்சிகளும் இல்லை என பொலிஸ்  மா அதிபர் அறிவித்துள்ள நிலையில், தனது சேவை பெறுநரை, நுகேகொடை நீதிவான் நீதிமன்ற வழக்கிலிருந்து விடுவிக்க அந்த நீதிமன்றுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இந் நிலையில் இந்த  ரிட் மனுவை  விசாரிக்கும் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ரஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வவைன் குறித்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி உத்தர்வை அறிவிப்பதாக தெரிவித்தனர்.

முன்னதாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபராக தன்னை பெயரிட்டு இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய மேன் முறையீட்டு நீதிமன்றில்  தாக்கல் செய்திருந்தார்.

 அம்மனுவை பரிசீலித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், கடந்த 2020 ஜூன் 08 ஆம் திகதி, நீதிவான் நீதிமன்ற விசாரணைகளுக்கு இடைக்கால தடை விதித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58