தோட்ட அதிகாரிகளின் செயலால் வாழ்வாதாரத்தை இழந்த மாற்றுத்திறனாளியின் குடும்பம்

Published By: Digital Desk 4

13 Oct, 2021 | 10:15 PM
image

மஸ்கெலியா பிவுன்ஸ்விக் தோட்டத்தைச்  சேர்ந்த ரவிகாந்த் என்பவர் நடத்தி வந்த சோழ வியாபார வண்டியை பிரவுன்ஸ்விக் தோட்ட உதவி முகாமையாளர்கள் இருவரும், தோட்ட காவலாளியும் சேர்ந்து உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக குறித்த நபர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

No description available.

தனது மாற்றுத்திறனாளி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் ரவிகாந்த் என்பவர், தனது குடும்ப ஜீவனோபாயத்திற்காக தள்ளுவண்டி ஒன்றில் சோழக்கதிர்களை விற்று வந்துள்ளார்.

இந்த வியாபார நடவடிக்கைகளுக்காக மஸ்கெலியா பிரதேச சபையின் அனுமதியைப் பெற்றே குறித்த தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்.

No description available.

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 03 மாதகாலமாக தொழில் செய்ய முடியாத நிலையில் ரவிகாந்த் குறித்த தள்ளு வண்டியை தனது வீட்டிற்கு மேல் உள்ள பிரதான வீதியின் அருகில் நிறுத்திவைத்துள்ளார்.

இதன்போது சம்பவதினமான நேற்று (12.10.2021) மாலை குறித்த வீதியூடாக சென்ற பிவுன்ஸ்விக் தோட்ட உதவி முகாமையாளர்கள் இருவர், ரவிகாந்த்தை அழைந்து இங்கே இந்த வண்டியை நிறுத்திவைக்க கூடாது என்றும், இதனால் தேயிலை செடிகளுக்கும் வீதிக்கும் இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்து இந்த வண்டியை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ரவிகாந்த், இன்று என்னால் முடியாது நாளைக் காலை அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

No description available.

இதையடுத்து நேற்று மாலை குறித்த  இரு தோட்ட உதவி முகாமையாளர்களும், தோட்ட காவலாளியும், சேர்ந்து அந்த தள்ளுவண்டியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ரவிக்காந்த் குறித்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு குறித்த சம்பவத்தால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு நஸ்டயீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஹுவலை கொலை சம்பவம் ; பொலிஸாரால்...

2026-01-24 10:20:59
news-image

கல்லடி பாலத்தில் இருந்து குதித்து யுவதி...

2026-01-24 10:20:01
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல்...

2026-01-24 10:03:06
news-image

துப்பாக்கியுடன் காரை கைவிட்டு தப்பிச் சென்றவர்கள்...

2026-01-24 09:53:42
news-image

மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர் விபத்தில் சிக்கி...

2026-01-24 09:44:42
news-image

ஹிரிகெட்டிய கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை...

2026-01-24 09:22:09
news-image

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி...

2026-01-24 09:21:06
news-image

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கர்ப்பப்பை...

2026-01-24 09:10:46
news-image

இலங்கை கடற்பரப்பில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-01-24 08:39:47
news-image

தனிப்பட்ட தகராறு கொலையில் முடிந்தது!

2026-01-24 08:30:08
news-image

வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது!

2026-01-24 08:26:25
news-image

இன்றைய வானிலை

2026-01-24 06:46:44