மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை 21 ஆம் திகதி முதல் ஆரம்பம்

Published By: Digital Desk 4

13 Oct, 2021 | 07:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 21ஆம் திகதி காலை முதல் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்கப்படும்.

தூர பிரதேச பயணிகள் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

 

அவர் மேலும் குறிப்பிகையில்,

மாகாணங்களுக்கிடையில் தற்போது அமுலில் உள்ள பொது போக்குவரத்து தடை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டவுடன் மாகாணங்களுககிடையிலான பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புகையிரதத்தில் சன நெரிசலை குறைப்பதற்காக காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத போக்குவரத்திற்கு 130  புகையிரத பயணங்களை சேவையில் ஈடுப்படுத்தவும், மாகாணங்களுக்குள்ளான புகையிரத பயணங்களை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும்.புதிய சுகாதார வழிகாட்டி அறிவுறுத்தல்கள் அனைத்து புகையிரத நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம்  மக்கள் புகையிரத சேவையினை பயன்படுத்த வேண்டும்.என வலியுறுத்துகிறோம்.கொவிட்-19வைரஸ் தொற்று பரவல் குறைவடைந்ததும் பெரும்பாலானோர் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றவதில்லை.ஆகவே இனியாவது அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோவின் பிணை மனு...

2025-11-08 10:49:17
news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42