(இராஜதுரை ஹஷான்)
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை பகல் அலரிமாளிகையில் இடம் பெறவுள்ளது.
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் போராட்டம் தொடரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. 21ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைத்தால், ஆசிரியர்களும், அதிபர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பார்கள். என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் -அதிபர்கள் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.24 வருடகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தரகோரி சுமார் 3 மாத காலமாக போராட்டத்தில் ஈடுப்படுகிறோம்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வை காண்பதை விடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர் அதிபர்களை தண்டிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளின் ஊடாக முன்னெடுத்துள்ளது.
ஆசிரியர் - அதிபர் போராட்டத்தை முடக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நியாயமான தீர்வையே கோருகிறோம். ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.இப்பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு கிடைக்கப் பெற்றால் 21 ஆம் திகதி ஆசிரியர்-அதிபர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பார்கள்.
இம்முறையும் தீர்வு கிடைக்கப் பெறாவிடின் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படுவோம். பிரதமர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையும் முரண்பாடான தன்மையில் காணப்படுகிறது.என்றார்.
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.இச்சந்திப்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM