பப்படத்தை சாப்பிட்ட 5 வயது மகளுக்கு வாயில் சூடு வைத்த தாய் கைது

Published By: Digital Desk 2

09 Oct, 2021 | 09:19 PM
image

அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் விநாயகர் குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் அருகில் உள்ள கடைக்குச் சென்று பப்படம் வாங்கி வருமாறு தாயார் தனது 5 வயது மகளுக்கு கூறியுள்ளார்.

எனவே 5 வயது சிறுமி பப்டத்தை வாங்கிக் கொண்டு வரும் வழியில் ஒரு பப்படத்தை பச்சையாக சாப்பிட்டு விட்டார். இதனால் கோபமுற்ற தாய் தனது மகளுக்கு தீயினால் சூடு வைத்துள்ளார்.  

சம்பவத்தை அவதானித்த சிறுமியின்  தாத்தா அக்கராயன் பொலிஸாருக்கு வழங்கிய  தகவலுக்கு அமைய குறித்த தாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று  சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை தொழிலுக்குச் சென்ற வேளையில்  இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, தாயாரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04