3 ஆவது கட்ட கொவிட் தடுப்பூசி வழங்கலுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பம் - சுகாதார அமைச்சர்

Published By: Digital Desk 2

09 Oct, 2021 | 03:37 PM
image

எம்.மனோசித்ரா

நாட்டில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலுக்கான தயார்படுத்தல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , அதற்கு தேவையான தடுப்பூசி தொகைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கலில் முன்னணியிலுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதோடு , தடுப்பூசி வழங்கலோடு கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளிலும் உலகலாவிய ரீதியில் இலங்கை முதன்மை வகிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கலின் முக்கியத்துவம் மற்றும் கொவிட் தொற்றிலிருந்து மக்கள் எவ்வாறு பாதுகாப்பு பெறுவது என்பது தொடர்பான விழிப்புணர்வு காணொளியின் அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

30 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதோடு , முழு சனத்தொகையில் 55 சதவீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

20 - 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் சுமுகமாக இடம்பெற்று வருவதோடு , அவற்றில் எதிர்பார்த்த இலக்கினை அடைய முடிந்துள்ளது.

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட போதிலும் , தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதும் அத்தியாவசியமானதாகும்.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் அதே வேளை பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதும் அத்தியாவசியமானதாகும் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01