அரசிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் குதிப்போம் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க யாழ். போதனா வைத்தியசாலை கிளை தலைவர் தி.பாணுமகேந்திரா தெரிவித்தார்.
நாடு பூராகவும் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை அவர்,
இன்றையதினம் நாடு தழுவிய ரீதியில் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் 7 அம்ச கோரிக்கையினை முன்வைத்து நடத்திவரும் தொழிற்சங்க போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றும் நாடுதழுவிய ரீதியில் 40 ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அரசிடம் ஏற்கனவே வைத்த 7 அம்ச கோரிக்கையை விரைவுபடுத்தி தருமாறு கோரிக்கை முன்வைத்து இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
யாழ். மாவட்டத்திலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பூராகவும் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்தப் போராட்டமானது முன்னெடுக்கப்படுகின்றது.
எமது கோரிக்கைகளை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கவனத்தில் எடுத்து தீர்வு தராத பட்சத்தில் எமது போராட்டமானது மேலும் வலுப்பெற்று தாய் சங்கத்தின் அனுமதியுடன் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து முற்று முழுதான போராட்டத்திற்கு விரைவில் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும்.
எனவே இந்த அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்குரிய தீர்வினை வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM