(எம்.மனோசித்ரா)
நாட்டிலுள்ள 18, 19 வயதுகளையுடைய பாடசாலைச் செல்லும் மாணவர்களுக்கு அவரவர் பாடசாலைகளிலும், குறித்த வயது பிரிவைச் சேர்ந்த பாடசாலை செல்லாதோருக்கு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான வேலைத்திட்டங்கள் பாடசாலை மட்டத்திலும், பிரதேச சுகாதார மருத்துவ பிரிவு மட்டத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டில் 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரையில் சுமார் 10,000 சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் எவருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாத நிலையில் ஆரோக்கியமான சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM