மை வீசிய மாணவர்கள் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில்

Published By: Robert

18 Dec, 2015 | 12:17 PM
image

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை எழுதி விட்டு வழமை போன்று நண்பர்களுடன் சேர்ந்து ஒருவர் மற்றவர் மீது மை வீசி மகிழ்ச்சியை கொண்டாடிய மாணவர்கள் மீது தாக்குதல்  நடாத்தப்பட்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இறுதி நாளான நேற்று மாலை பரீட்சை முடிந்து வீதிக்கு வந்த மாணவர்கள் மை வீசி தமது பரீட்சை நிறைவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது அவ்வீதியால் வந்த சிலர் இம்மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட இரு மாணவர்கள் வைதியாலையில் அனுமதிக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தாக்குதலுக்கு இலக்காகிய முஹம்மது அதாயி மற்றும் எம்.லப்ரி ஆகிய இருமாணவர்களுமே காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரீட்சை இறுதி நாள் என்பதனால் நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வீதியில் வழமை போன்று ஒருவருக்கொருவர் மையடித்து கொண்டிருந்த வேளை வீதியால் சிகப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மேலும் சிலர் எங்கள் மீது சாரமாரியாக தாக்குதலை மேற் கொண்டு விட்டு சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்ததோடு தாங்க  முடியாத வலியின் காரணமாகவே எமது ஏனைய மாணவர்கள் மூலம் தாங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50