(இராஜதுரை ஹஷான்)
பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்கப்படும்.
புகையிரதத்திற்குள் சமூக இடைவெளியை பேணவேண்டும் என்ற காரணத்தினால் அதிக புகையிரதங்கள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
அவர்மேலும்குறிப்பிடுகையில்,
நாடுதழுவிய ரீதியில் கடந்த ஒரு மாதகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்க தீர்மானித்திருந்தோம். 108 புகையிரத பயணங்களை சேவையில் ஈடுப்படுத்த திட்டமிட்டிருந்தோம்.
மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை இரண்டுவார காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளதால் புகையிரத சேவையினை இரண்டுவார காலத்திற்கு ஆரம்பிக்க வேண்டாம் என கொவிட் ஒழிப்பு கட்டுப்பாட்டு குழு அறிவுறுத்தியது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும். மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை,நெடுந்தூர புகையிரத பயண சேவை ஆகியவற்றை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
குருநாகல், பாணந்துறை மற்றும் வெயாங்கொட ஆகிய பகுதிகளில் அதிவேக புகையிரத சேவைகளை வழமைக்கு மாறாக அதிகரிக்கவும், காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM