ஒப்பந்த அடிப்படையில் கிராமசேவகர் படுகொலை - புகையிரத நிலைய உப பொறுப்பதிகாரி கைது

Published By: Digital Desk 4

05 Oct, 2021 | 09:27 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

நிக்கவரட்டிய பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட, அம்பன்பொல பொலிஸ் பிரிவில்,  அம்பன்பொல தெற்கு கிராமசேவகர்  யூ.எஸ்.எம். கபில பிரியந்த சபுகுமாரவின் ( 51 வயது) படுகொலை, ஒன்றரை இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் விடயங்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். 

அதன்படி கொலை நடந்து 24 மணி நேரத்துக்குள் ஒப்பந்ததை வழங்கியதாக கூறப்படும் பிரதான சந்தேக நபரான  கல்கமுவ புகையிரத நிலையத்தின் உப பொறுப்பதிகாரி  ( நடவடிக்கை) சமன் பெரேரா அம்பன்பொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந் நிலையில் சந்தேக நபர் இன்று மாஹோ நீதிவான் நுத்தினன் சிறிவர்தன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 இந் நிலையில், இந்த படு கொலையுடன் நேரடி தொடர்புடைய மூவரைக் கைது செய்ய  அம்பன்பொல பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் மூன்று பொலிஸ்  குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் நிக்கவரட்டிய வலய குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து செயற்படுவதாக நிக்கவரட்டிய வலயத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55