(எம்.எம்.சில்வெஸ்டர்)
உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை கிரிக்கெட் இரசிகர்களுக்கு நேரடியாக கண்டுகளிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இப்போட்டித் தொடரில் நடைபெறவுள்ள 45 போட்டிகளையும் நேரடியாக கண்டுகளிப்பதற்கான டிக்கெட் விநியோகம் நடவடிக்கையை கடந்த ஞாயிறு முதல் ஆரம்பித்துள்ளது.
இம்முறை உலக இருபதுக்கு 20 தொடரானது ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகியன கூட்டாக நடத்துகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் போட்டிகளை நேரடியாக கண்டுகளிப்பதற்கு 70 சதவீதமானோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், ஓமானில் நடைபெறும் போட்டிகளை பார்வையிடுவதற்கு 3000 பார்வையாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான சூழலுடன் இரசிகர்களுக்கு போட்டியை நேரடியாக கண்டுகொள்ள முடியும்.
உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பிரதான சுற்றுக்கு தகுதியை பெறுவதற்கான தகுதிகாண் சுற்றுத் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதியன்றும் பிரதான சுற்று எதிர்வரும் 23 ஆம் திகயன்று ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இலங்கை மற்றும் ஓமான் அணிகள் பங்கேற்கும் இரண்டு சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் எதிர்வரும் 7 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறுவுள்ளன.
இதன் முதலாவது போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கும் ஆரம்மாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM