கிளிநொச்சி வைத்தியசாலைக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களை மாத்திரம் தான் அனுப்ப வேண்டும் என்ற விடயத்தில் நாம் தலையிட முடியாது - சன்ன ஜயசுமன 

Published By: Digital Desk 3

04 Oct, 2021 | 08:31 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்,வசீம்)

கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலையில்  கடமையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களில் 65 வீதமானோர் சிங்களம், ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்கள் எனவும், இந்த வைத்தியசாலைக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களை மட்டும் தான் அனுப்ப வேண்டும் என்ற விடயத்தில் நாம் தலையிட முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ். ஸ்ரீதரன் கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலை ஆளணி நியமனம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வலவிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் சார்பாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்ததுடன்   மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலையில்  அங்கீகரிக்கப்பட்ட  ஊழியர்களின் 519 ஆக உள்ள நிலையில் 419  ஊழியர்களே பணியில் உள்ளனர். இவர்களில்   65 வீதமானோர் சிங்களம், ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்கள். 35 வீதமானவர்கள் மட்டுமே தமிழ், ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய  ஸ்ரீதரன் எம்.பி, கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வீதம் தமிழ் மக்கள் வாழும் நிலையில் 65 வீதமானோர் சிங்களம், ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்களாக இருப்பது எந்த வகையில் நியாயம்? இதனால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதற்கு  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதிலளிக்கையில்,

வைத்தியர்கள், ஊழியர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையிலேயே வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையிலேயே கிளிநொச்சி வைத்தியசாலைக்கான ஆளணி நியமனங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலைக்கு தமிழ் மொழி தெரிந்தவர்களை மட்டும் தான் அனுப்ப வேண்டும் என்ற விடயத்தில் நாம் தலையிட முடியாது என்றார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31