நல்லாட்சிக்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் ஏற்படப்போகிறது - கனியவள தொழிற்சங்கம் எச்சரிக்கை

Published By: Digital Desk 4

03 Oct, 2021 | 10:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்திய நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்கும் கொள்ளையுடன் ஜனாதிபதி செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என  கனிய எண்ணெய் மற்றும்  சேவை சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்தார்.

முரண்பாட்டு நிலைமைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்கவே பொறுப்பெற்க வேண்டும்! –  DanTV

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரித்தானியரின் ஆட்சி காலத்தில் 101 குதங்களை  கொண்டதாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டன. கனிய எண்ணெயை சேமிக்கும் பிரதான தாங்கியாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் காணப்பட்டன.

 1987ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனாவிற்கும், இந்திய பிரதமர்  ராஜீவ் காந்திக்கும் இடையில் செய்துக் கொள்ளப்பட்ட  இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கி விவகாரத்தில் இலங்கை இந்தியாவை தவிர்த்து ஏனைய நாடுகளுடன் தொடர்புக் கொள்ள கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு  காலப்பகுதியில் அப்போதைய பிரதமரான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சி காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் 99 தாங்கிகள் இந்திய  நிறுவனத்திற்கு 35 வருட கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.

 இலங்கையின் கனிய எண்ணெய் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் ஐ.ஓ. சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 99  எண்ணெய் தாங்கிகளில் 15 தாங்கிகளை இந்திய நிறுவனம் பயன்படுத்துகிறது.

2003ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை திருத்தி புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது.  புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய ஐ.ஓ. சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள 15 தாங்கிகளை தொடந்து அந்நிறுவனத்திற்கு வழங்கவும்,10 தாங்கிகளை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவும், மிகுதி 74 தாங்கிகளை இந்திய நிறுவனமும், கனிய எண்ணெய் கூட்டுத்தாபனமும் ஒன்றினைந்து அபிவிருத்தி செய்யவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் அப்போதைய அரசாங்கம் ஒப்பந்தத்தை கைச்சாத்திடவில்லை.

இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்தின் வசமுள்ள தாங்கிகளில் 85 தாங்கிகளை முழுமையாகவும், 16 தாங்கிகளை பகுதியளவிலும் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.  2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்முடிவடைவதற்கு முன்னர் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திட முயற்சிப்பது ஏற்புடையதல்ல,  பெருமளவிலான தாங்கிகளை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் வசம் வைத்துக் கொள்வதை விடுத்து  இந்திய நிறுவனத்திற்கு மீண்டும் அனைத்து உரிமைகளையும் வழங்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசாங்கம்கனிய எண்ணெய்கூட்டுத்தாபனத்தின்சட்டத்தை திருத்தியமைக்க தீர்மானித்துள்ளது.  சட்டம் திருத்தியமைக்கப்பட்டதன் பின்னர் கனிய  வள கூட்டுத்தாபனத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான நோக்கம் அரசாங்கத்திடம் உள்ளது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55