கார்வண்ணன்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை கட்டியெழுப்பி, இயக்கி, 35 ஆண்டுகளில் இலங்கையிடம் ஒப்படைக்கின்ற 700 மில்லியன் டொலர்கள், உடன்பாட்டில் இந்தியாவின் அதானி குழுமம் கையெழுத்திட்டிருக்கிறது.
இலங்கையின் துறைமுக திட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆகக் கூடிய வெளிநாட்டு முதலீடு இது என்று, துறைமுக அதிகார சபை கூறியிருக்கிறது.
இந்த உடன்பாட்டுக்கு அமைய, புதிதாக கட்டப்படவுள்ள மேற்கு சர்வதேச கொள்கலன் முனையத்தின் 51 சதவீத பங்குகளை அதானி குழுமமும், 34 சதவீத பங்குகளை, அதன் உள்ளூர் பங்குதாரரான ஜோன் கீல்ஸ் நிறுவனமும், எஞ்சிய 15 சதவீத பங்குகளை துறைமுக அதிகாரசபையும் கொண்டிருக்கும்.
கொழும்பு துறைமுகத்தில் 500 மில்லியன் டொலர்கள் செலவில் சீனாவினால் அமைக்கப்பட்ட தெற்கு கொள்கலன் முனையத்துக்கு அருகிலேயே, இந்த புதிய மேற்கு கொள்கலன் முனையம் அமைக்கப்படவுள்ளது.
20 மீற்றர் ஆழம் கொண்ட இந்த முனையத்தில், ஆண்டுக்கு 3.2 மில்லியன் கொள்கலன்களை கையாளக் கூடிய வகையில், 1.4 கிலோ மீற்றர் நீளமுடைய, கொள்கலன் இறங்குதுறை புதிதாக கட்டப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, 600 மீற்றர் நீளமுடைய இறங்குதுறையுடன் கூடிய முனையம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அமைக்கப்படவுள்ளது.
700 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ள மேற்கு கொள்கலன் முனையத்தை அதானி குழுமமே, அடுத்த 35 ஆண்டுகளுக்கு செயற்படுத்தவுள்ளது. அதற்குப் பின்னர், அந்த முனையம், துறைமுக அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-03#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM