bestweb

நடிகர் திலகம் சிவாஜியின் 94 ஆவது ஜனன தினம் இன்று

Published By: Digital Desk 2

01 Oct, 2021 | 08:22 PM
image

நாடகத்திரை, வெள்ளித்திரை இவைகளில் தன் கலையாளுமையை செலுத்த வி.சி.கணேசன் என்ற இந்த சாதாரண மனிதன் பட்ட கஷ்ட நஷ்டங்கள்,அவமானங்கள் தான் எத்தனை எத்தனை..... '' மின்மினிப்பூச்சிகள் கூடப் பறக்கும் போது தான் மின்னுகின்றன'' என்பது பொன்மொழி. சிவாஜி அவர்கள் திரைச்சிகரத்தை அடைவதற்கு பல தியாகங்களை விலையாகக் கொடுத்தார்.

சிவாஜி பிறந்த அன்றே  தகப்பன் சின்னையா மன்றாயர் தேசிய விடுதலை போராட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் , பிறந்த அன்றே தகப்பனை சிறைவாசம் அனுப்பிய தரித்திரம் பிடித்த பிள்ளை என தாயைத்தவிர மற்ற உறவுகள் வசை பாடினார்கள்.

தெருக்கூத்து நாடகங்கள்,கம்பளத்தான் கூத்துகள் போன்ற பொழுது போக்குகள் கணேசனின் பசியை மறக்கச் செய்தது. படிப்பிலும் பெரிதாக ஆர்வமில்லை சதா நாடகம்தெருக்கூத்து என்றிருந்த மகனின் கலையார்வத்தை அறிந்து கொண்டார் தாயார். அப்போது திருச்சியில் முகாமிட்டிருந்த '' யதார்த்தம் பொன்னுச்சாமிப்பிள்ளையின் மதுரை ஸ்ரீ பால கான சபா'' நாடகக்குழுவில் பழம்பெரும் நடிகர் சக்ரபாணி உதவியுடன் இணைந்து நடிக்கத் தொடங்கினார். 

அதன் பிறகு 1950 களில் '' பராசக்தி'' நாடகம் திரைப்படமாக உருவான நேரத்தில் கணேசன் படாத பாடுபட்டு '' குணசேகரன் '' என்ற பாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து படம் முக்கால்வாசி வளர்த்த நிலையில் ஏவிஎம் அதிபர் மெய்யப்பச் செட்டியார் மூலம் ஒர் பெரிய ஆபத்து வர இருந்தது. படத்தை பார்த்த செட்டியார் சிவாஜியைப் பார்த்து குதிரை மூஞ்சி,மீனுவாயன் மாதிரி இருக்கான்,ரிஸ்க் எடுக்காம கே.ஆர். ராமசாமியைப் போட்டு படத்தை மீண்டும் எடுங்கள் என படத்தின் மற்றொரு பாகஸ்தரான தயாரிப்பாளர் நெஷனல் பிக்சர்ஸ் பெருமாளிடம் கூற இடிந்தே போனார் கணேசன். 

பிறகு அறிஞர் அண்ணா போன்றோர் கணேசனின் நடிப்பில் நம்பிக்கை உள்ளது எனவே பாக்கி காட்சிகளை கணேசனை வைத்தே எடுத்து  படத்தை முடியுங்கள் எனக்கூற '' பராசக்தி '' தமிழ் நாடு முழுவதும் அபார வெற்றி கண்டது.

சிவாஜி நடித்த '' பாபு '' படத்தை ஹிந்தி ரீமேக்கில்  திலீப்குமார் நடிக்க தயாரானபோது, படத்தை திலீப்குமார் பார்த்து விட்டு இந்த ரோலில் நான் மட்டுமல்ல வேறு எந்த நடிகனாலும் இவ்வாறு உருக்கமாக செய்ய முடியாது என முயற்சியை கைவிட்டார்.இது வட இந்திய  கலைஞன் சிவாஜிக்கு கொடுத்த  ஓர் மாபெரும் அங்கீகாரம். 

அண்ணா அவர்கள் ஒரு முறை ,உலகின் தலை சிறந்த நடிகரான மாலன் பிராண்டோ முயற்சித்தால் ஒரு வேளை சிவாஜியைப் போல் நடிக்க முற்படலாம் என்றார்.  இந்த ஒரு வார்த்தை தமிழ் நாட்டின் பெர்னாட்சா என வர்ணிக்கப்படும் அண்ணாவின் திருவாயினால் மலர்ந்தது.

யுகங்கள் பல கடந்தாலும் யுகபுருஷர் சிவாஜி கணேசன் புகழ் என்றென்றும் நீடிக்கும் பல யுகங்கள் கடந்து ....சிவாஜியால் ஒவ்வொரு தமிழனும் புகழ் கொள்ளும் சூழல் ஏற்படக் காரணமாக இருந்த அன்னை கலைமகளுக்கு நன்றி...!

எஸ்.க.ஆ.சதீஷ் கம்பளை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் வெற்றி விரிவுபடுத்தப்பட...

2025-07-10 12:35:15
news-image

மண் மக்களிற்கான நீதிக்கா பேசும்போது செம்மணியிடமிருந்து...

2025-07-10 11:23:49
news-image

காதலர்களால் ஆக்கிரமிக்கப்படும் கோட்டை ரேம்பர்ட் வெட்லாண்ட்...

2025-07-09 13:36:46
news-image

தமிழரசு கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் 

2025-07-08 18:52:04
news-image

எங்கள் கணவர்கள் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது...

2025-07-09 14:51:53
news-image

இலங்கையில் இணைய குற்ற வலையமைப்புகளின் அச்சமூட்டும்...

2025-07-07 15:49:57
news-image

' அவைகள் தோல்களும் எலும்புகளும்"காசாவில் பால்மா...

2025-07-07 12:16:34
news-image

மக்கள் தொடர்பு அறுந்த அரசியல்வாதிகளின் விதி

2025-07-06 16:59:37
news-image

உலக முஸ்லிம்களின் கண்ணியத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ள...

2025-07-06 16:58:36
news-image

தலாய் லாமா: அரசியல் சூறாவளிக்குள் ஓர்...

2025-07-06 16:35:41
news-image

சேர்பியாவில் தொடரும் வெகுஜனப் போராட்டங்கள்

2025-07-06 16:32:35
news-image

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அர்த்தமுள்ள கொள்கைகள்...

2025-07-06 16:27:50