16 வயதுடைய சிறுமி உயிரிழப்பு தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கான விளக்கமறியல் உத்தரவு ஒக்டேபர் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இன்று காலை இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முந்தைய விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் பிணையில் விடுவிக்கப்பட்டனர், அதே நேரத்தில் இருவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது.
கொழும்பு, பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் வீட்டுப் பணிக்காக பயணியளராக அமர்த்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் ரிஷாத் பதியூதீனை தவிர மேலும் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, அவரது சகோதரர் மற்றும் சிறுமியை கொழும்புக்கு பணிக்காக அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM