எம்மில் பலருக்கும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்திருப்பார்கள். இவர்களில் பலருக்கு இரத்த தானம் செய்ய விருப்பமிருக்கும்.
ஆனால் இந்த தருணத்தில் குருதியை கொடையாக அளிக்கலாமா? கூடாதா? என்ற ஒரு சந்தேகம் எழும். அத்துடன் இரத்த தானத்தின் மூலம் மற்றவர்களுக்கு கொரோனாத் தொற்று பரவுமோ? என்ற சந்தேகமும் இருக்கும்.
இதற்கு மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கையில்,''கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் மூன்று மாதத்திற்கு பிறகு இரத்த தானம் அளிக்கலாம்.
மேலும் தொற்று பாதிப்பிற்காக இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு, 15 நாட்கள் கழித்து இரத்த தானம் செய்யலாம். இதன்போது இரத்த தானம் அளிப்பவர்களுக்கும், ரத்ததானம் பெறுபவர்களுக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி இந்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும், கொரோனாத் தொற்று பாதித்தவர்களும் வழங்கும் இரத்ததானத்தின் மூலமாகவோ அல்லது இத்தகைய குருதியை கொடையாக பெறுபவர்களுக்கோ இரத்த உறைவு பிரச்சனையோ அல்லது கொரோனாத் தொற்று பாதிப்பு பிரச்சினையோ ஏற்படும் என்பதற்கான ஆதாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை இல்லை. இதனால் இது குறித்த அச்சம் தேவையில்லை.'' என்கிறார்கள்.
அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM