2020 - 2021ம் ஆண்டுகளில் முறையான விதத்தில் சிகரட்டிற்கான வரி அறவிடப்படாமையினால் சுமார் ரூபா 100 பில்லியன்களை அரசாங்கம் இழந்துள்ளது. இழக்கப்பட்ட இத்தொகையை முன்மொழியப்படவுள்ள 2022ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இப்பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக பல்வேறு ஆலேசனைகள் நிதியமைச்சினால் முன்வைக்கப்பட்டன, அவற்றில் சில ஆலோசனைகளுக்கு பொதுமக்களின் எதிர்ப்புக்கள் வெளியாகின. எனினும் பொது மக்கள் பெரிதும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாத சிகரட் மீதான வரியை அதிகரிப்பதற்கு 2019 ஆம் ஆண்டின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியமைச்சினால் முன்மொழியப்படவும் இல்லை, கவனம் செலுத்தப்படவும் இல்லை. இந்த தீர்மானத்தின் மூலமாக நாட்டிற்கு கிடைக்கப்பெறவிருந்த சுமார் ரூபா 100 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது.
அதாவது இலங்கை புகையிலை நிறுவனம் (CTC) எனும் பெயரில் இயங்கி வரும் 84.14வீதமான பங்குகளிற்கு உரிமம் கொண்ட பல்தேசிய நிறுவனமான பிரித்தானியா, அமெரிக்கா புகையிலை நிறுனத்திடமிருந்து, பெற்றிருக்க வேண்டிய தொகையான ரூபா 100 பில்லியன்கள் எனும் தொகை இழக்கப்பட்டமையானது, நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு தாக்கம் செலுத்தும் காரணிகளில் மிக பிரதான காரணியாகும்.
கடந்த இரண்டு வருடங்களாக அத்தியவசிய பொருட்களின் வரி மென்மேலும் அதிகரித்துள்ளதோடு, அத்தியவசியமற்ற பொருளான சிகரட் மீதான வரி எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படவில்லை. இச்சம்பவமானது புகையிலை நிறுவனம் நிதியமைச்சின் மூலமாக பல தந்திரோபாயமான நுணுக்கங்களை மேற்கொண்டு வருகின்றமை வெளிப்படுகின்றன.
கோல்ட் லீப் (Gold Leaf : அதிக விலைக்கு விற்கப்படும் சிகரட் வகை) விலையேற்றம் இவ்வட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளது
வருடம் விலை (ரூபா)
2015 33
2016 35
2017 50
2018 55
2019 65
2020 65
2021 65
கடந்த 2019ம் ஆண்டு தொடக்கம் சிகரட் மீதான வரி அதிகரிப்பு இடம்பெறவில்லை. இவ்விரண்டு வருடங்களுக்குள் முறையாக சிகரட் வரி அதிகரிப்பை குறைந்த பட்சம் ரூபா 20.00 இனால் உயர்த்தியிருப்பின், சுமார் ரூபா 100 பில்லியன்களை அரசாங்கம் வருமானமாக பெற்றிருக்கலாம்.
இழக்கப்பட்ட இவ்வரி வருமானத்தின் பெறுமதியை கீழ்காணும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
• தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு செலவான தொகை : ரூபா 100 பில்லியன்கள்
• மொரகஹாகந்த நீர்ப்பாசனத் திட்டத்திற்கு செலவான தொகை : ரூபா 91 பில்லியன்கள்
• விமானநிலைய நுழைவிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைத்தல் திட்டத்திற்கு செலவான தொகை : ரூபா 39 பில்லியன்கள்
• மத்தளை விமான நிலையத்திற்கு செலவாகிய தொகை : ரூபா 21 பில்லியன்கள்
நிதியமைச்சின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய சுமார் ரூபா 100 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெற்றிருக்காவிடின் அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கான வரியை இந்தளவு அதிகரித்திருக்க நேரிட்டு இருக்காது.
இறுதியாக 2019ம் ஆண்டு சிகரட் மீது வரியை அதிகரித்தமையினால் இலங்கை அரசாங்கத்திற்கு ரூபா 94.3 பில்லியன்கள் வருமானம் அதிகரித்துள்ளது என 2020ம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையில் (155ம் பக்கம்) குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மத்தியவங்கி அறிக்கைகளில் சிகரட் மீதான வரி அதிகரிப்பானது ஒரு வெற்றியளிக்கும் வழிமுறை என்பதை நிரூபித்திருந்தாலும், அத்தியவசிய பொருட்கள் மீதான வரி மென்மேலும் அதிகரிக்கும் காலப்பகுதியில்; மற்றும் அரசாங்கம் மக்களின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் இத்தருணத்தில்; நிதியமைச்சானது இரண்டு வருடங்களாக சிகரட் மீது வரி அதிகரிப்பை மேற்கொள்ளாமல் இருந்தது ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகின்றது.
மேலும் சிகரட் மற்றும் புகையிலை மீது வரியை அதிகரிக்கும் போது பாவனையில் சடுதியான வீழ்ச்சி ஏற்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது (உலக சுகாதார ஸ்தாபனம் றுர்ழுஃNஆர்ஃPNனுஃ14.2). பொதுவாக சிகரட் மீது 10வீதம் வரி அதிகரிக்கப்படும் போது அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்படுவதோடு, எம்மை போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சிகரட் பாவனையானது 5வீதத்தினால் குறைவடையும். இந்நேரத்தில் சிகரட் பாவனையை குறைப்பதானது கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பாரிய உதவியாக அமையும் என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிகரட் மீது வரி அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சட்ட விரோதமான சிகரட்டுக்கள் அதிகரித்துவிட்டன அல்லது பீடி பாவனை அதிகரிக்கும் என பல போலியான பிரச்சாரங்களை புகையிலை நிறுவனம் ஊடகங்களினூடாக சமூகமயமாக்குவதற்கு முயற்சிக்கின்றது. மேலும் வருடாந்தம் அரசாங்கத்தினால் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள்; முன்வைக்கப்படும் காலங்களில் புகையிலை நிறுவனம் இது போன்ற போலியான கருத்துக்களை பரப்புவது வழக்கம். சட்ட விரோதமான சிகரட் வியாபாரம் என்பது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு வியாபாரம் என்பதோடு, பீடி பாவனையானது இலங்கையில் அதிகரிக்கவில்லை என்பது பல ஆய்வுகளில் இருந்தும் தெரியவந்துள்ளது. இவை அனைத்துமே புகையிலை நிறுவனத்தின் வியாபார நுணுக்கங்கள் என்பதை நாம் நினைவூட்டுகிறோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, நாடு பொருளாதார நெருக்கடியிலிருக்கும் இந்த நிலைமையில் இன்னுமொரு இழப்பை சந்திக்காமல் இருப்பதற்காகவும், அவ்விழப்பை தடுப்பதன் மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்துவதற்கும், பொது மக்களின் சலுகைகளை வழங்குவதற்கும்;, இம்முறை நவம்பர் மாதம் முன்வைப்பதற்கு எதிர்ப்பார்க்கும் 2022ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் கீழ்காணும் படிமுறைகளை பின்பற்றுமாறு கௌரவத்துடன்; கேட்டுக்கொள்கின்றோம்.
• சிகரட்டிற்கான அதிக பட்ச வரியை பணவீக்கம் மற்றும் கொள்வனவு திறனுக்கு ஏற்ற வகையில் விதித்தல்.
• வரி அதிகரிப்பின் பின்னர், வரிப்பணத்திற்கு மேலதிகமாக புகையிலை நிறுவனம் மூலம் விலை நிர்ணயிக்கப்பட்டு அந்நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. (கடந்த வருடங்களில் முறையான வரி அதிகரிப்பு இடம்பெறாதமையினால் அதிகரிக்கப்பட்ட சிகரட்டிற்கான விலையின் 50வீதம் சிகரட் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இது அரசாங்கம் பெற்றுக்கொள்ளவிருந்த இலாபமாகும்)
• 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட உரையில் அப்போதைய பிரதமரும் நிதியமைச்சருமான கௌரவ. மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கூறப்பட்ட பயன்தகு வரி விதிப்பு முறைமையை நிறுவுதல்.
மேற்குறிப்பிடப்பட்ட படிமுறைகளை அமுல்படுத்துவதற்கும், நாடு இதுவரையில் இழந்த பெருந்தொகையான சிகரட் வரியை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காகவும், நிதியமைச்சு உட்பட அரசாங்கத்தின் பொறுப்பு கூற வேண்டிய தரப்பினர்களுக்கு அழுத்தங்களை வழங்குவதற்காக முன்வர வேண்டும் என, நாட்டின் மீது அன்பு செலுத்தும் அறிஞர கள், தொழில் வல்லுநர்கள், மதத்தலைவர்கள் உட்பட அனைத்து பிரஜைகளிடத்திலும், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கௌரவத்துடன் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM