சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு மனுஷவுக்கு அழைப்பு

Published By: Digital Desk 4

28 Sep, 2021 | 10:01 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை ஒன்றுக்கான வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்  நாளை மறுதினம் வியாழக்கிழமை (30) சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு மீண்டும் அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.

புதிய சி.ஐ.டி. பணிப்பாளரின் நியமனத்தால் பல சிரேஷ்ட அதிகாரிகள் இடமாற்றம்  கோரல் | Virakesari.lk

 ஏற்கனவே கடந்த 20 ஆம் திகதி திங்களன்று காலை 9.00 மணிக்கு சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு, நாரஹேன்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக அறிவித்தல் கையளிக்கப்பட்டிருந்தது.

 இந் நிலையில் குறித்த பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தான் தயார் எனினும்,  விசாரணை விடயம் குறித்து அறிவித்தலில் தெரிவிக்கப்படாமையால் அதனை தெரியப்படுத்துமாறு மனுஷ நாணயக்கார  சட்டத்தரணி ஊடாக சி.ஐ.டி.க்கு அறிவித்திருந்தார்.

ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுக் கட்டமைப்பு தகவல்கள் அழிந்தமை தொடர்பில்  அவ்வதிகார சபை தலைவர் வைத்தியர் ரசிக்க விஜேவர்தன செய்த முறைப்பாட்டுக்கு அமையவும், ரெலிகொம் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு தொடர்பிலான பணிப்பாளர் ஓய்வுபெற்ற  மேஜர் ஜெனரால் நிர்மல் தர்மரத்னவின் முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அழைக்கப்பட்டுள்ளதாக, சி.ஐ.டி.யின்  டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ். எம். சேனாரத்ன மனுஷ நாணயக்காரவுக்கு கடிதம் ஊடாக தெரிவித்துள்ளார்.

 எவ்வாறாயினும் கடந்த 03 திகதி ஊடக சந்திப்பொன்றினை நடாத்தியிருந்த மனுஷ நாணயக்கர, ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் பல தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பிலேயே வாக்கு மூலம் ஊடாக தகவல்களைப் பெற சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

  குறித்த விசாரணைகளை புறக்கணிப்பது,  தண்டனை சட்டக் கோவையின் 172 அவது அத்தியாயத்துக்கு அமைய தண்டனைக்குரிய குற்றம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02