கொழும்பு மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் தரப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

27 Sep, 2021 | 10:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்குவதற்காக மாநகர சபையினால் பிரேரணை ஒன்றை அனுமதி கேட்டிருந்தபோதும் மாநகர ஆணையாளர் அதற்கு அனுமதி வழங்காமைக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மாநகர ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாநகர வளாகத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Image

இந்த எதிர்ப்பு போராட்டத்துக்கு மாநகரசபை மேயர் ரோசி சேனாநாயக்கவும் கலந்துகொண்டிருந்ததுடன் மாநகரசபை சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரம்சி டோனியும் கலந்துகொண்டிருந்தார். 

நாட்டுக்குள் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணமாக, அவர்களுக்கு சதொச நிறுவனம் ஊடாக 4ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதியொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு மாநகர ஆணையாளர் உட்பட அதிகாரிகள் அனுமதிக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Image

அத்துடன் மாநகர ஆணையாளர் மேயரின் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளார். இதுதொடர்பில் கவனம் செலுத்தி நியாயமாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து மேல் மாகாண ஆளுநரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேயர் ரோசி சேனாநாயக்க குறிப்பிடுகையில்,

Image

மாநாகர எல்லையில் வாழ்பவர்களில் அதிகமானவர்கள் நாளாந்தம் வருமானம் ஈட்டிக்கொள்ளும் மக்களாகும். ஒரு மாதத்துக்கும் அதிக காலம் பயணக்கட்டுப்பாடு இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதனால் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உலர் உணவு பொதியொன்றை வழங்குவதற்கு நாங்கள் விசேட நிதி செயற்குழுவில் கோரி இருந்தோம்.

அத்துடன் மாநகரசபை மாதாந்த அமர்விலும் அதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அதனை வழங்க முடியாதவகையில் அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர். இதனை மேற்கொள்ள முடியாது என காரணங்களை தெரிவிக்கின்றனர். அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் எதுவும் சட்டபூர்வமானதல்ல என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04
news-image

நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் காணப்படும் வாகனங்களுக்கான...

2025-04-17 20:35:55
news-image

பொய், ஏமாற்று அரசியலுக்கு அதிக ஆயுட்காலம்...

2025-04-17 20:32:42