துஷான் ஜயவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்தவை சி.ஐ.டி.யின் கைகளில் : 4 மணி நேரம் பந்துல சொன்னது என்ன ?

Published By: Digital Desk 4

27 Sep, 2021 | 10:22 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குனவர்தன, ச.தொ.ச. மோசடிகள், வெள்ளைப் பூண்டு விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கூறிய அனைத்து விடயங்களும்  சி.ஐ.டி. கைகளில் கிடைத்துள்ளது. வாக்கு மூலம் வழங்க சி.ஐ.டி. சென்ற, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அவற்றைக் கையளித்துள்ளார். 

Articles Tagged Under: சி.ஐ.டி | Virakesari.lk

இந் நிலையில், அந்த ஊடக அறிக்கைகளில்  துஷான் குணவர்தன முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒவ்வொன்றாக  பந்துல குனவர்தன  சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு  தன் பக்க விளங்களை அளித்துள்ளார்.

 ச.தொ.ச. வெள்ளைப் பூண்டு மோசடி விவகாரம் தொடர்பில் பேலியகொடை விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரே விசாரணை செய்து வருகின்றனர்.

அவர்கள் ச.தொ.ச. பிரதி பொது முகாமையாளர் ( நிதி) , வர்த்தகர் ஒருவரை இவ்விவகாரத்தில் கைது செய்துள்ளனர். அதில் தற்போது பிரதி பொது முகாமையாளர் ( நிதி) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 இவ்வாறன பின்னணியில்   நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர்துஷான் குனவர்தன  பதவி விலகியதுடன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பந்துல குணவர்தன பொலிஸ் மா அதிபரிடம் விசாரணைக் கோரி முறையிட்டார்.

இரு  அமைச்சர்கள் தனக்கு கடமையை செய்வதை தடுத்து  அழுத்தம் பிரயோகிப்பதாக துஷான் குணவர்தன ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

 இந் நிலையிலேயே தான் முன்வைத்துள்ள முறைப்பாடுகளுக்கு முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பிரதமரிடம்  கடந்த 24 ஆம் திகதி கோரிக்கை விடுத்தார்.

இதற்கமைய இந்த முறைப்பாடு தொடர்பில் விரைவான விசாரணையினை முன்னெடுக்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அக்கணமே பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக அழைத்து அறிவுறுத்தினார். 

இதனையடுத்து உடனடியாக அன்றைய தினம் மாலையே பந்துல குனவர்தன சி.ஐ.டி.க்கு சென்று வாக்கு மூலம் வழங்கினார்.

இதன்போதே துஷான் குணவர்தன முன் வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பிலும் நான்கு மணி நேரமாக பந்துல குண்வர்தன சி.ஐ.டி.க்கு தன் பக்க விளக்கங்களை அளித்துள்ளார்.

இதன்போது துஷான் குணவர்தனவுக்கு எந்த வகையிலும் தான் அழுத்தம் கொடுக்கவில்லை என பந்துள குணவர்தன சி.ஐ.டி.யில் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16
news-image

வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறைக்காக நாணய நிதியத்தின்...

2025-03-14 16:40:45
news-image

பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகள்...

2025-03-14 22:11:35